இடுகைகள்

ஜூலை, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தானம்

என் தோழியின் தாய்க்கு உடல் நிலை சரில்லாமல் போனதால் அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மருத்துவரிடம் அவரின் உடல்நிலையைப் பற்றி அறிந்து கொண்டோம்.காய்ச்சல் வந்ததால் அவரின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது என்று கூறினார்.மேலும் அவர் உடலில் இரத்தம் குறைவாக உள்ளத்தால்  இரு நாளுக்குள் இரத்தம் ஏற்ற வேண்டும் என்றும் கூறினார்.அவரின் இரத்தம் வகைக்கு ஏற்ப இரத்தம் கிடைக்காததால் அந்த வகை இரத்தத்திற்காக அரும்பாடுபட்டோம்.மேலும் அருகில் உள்ள இரத்த வங்கியிலும் தேடி பார்த்தோம் ஆனால் கிடைக்கவில்லை.பின் ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அவரின் விமாண பயணத்தை இரத்து செய்து விட்டு இரத்தம் கொடுக்க வந்தார் என்பதை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்.தேவையான இரத்தம் கிடைத்ததால் அவரின் உடல் நிலை பாதுகாக்கபட்டது.அந்த நேரத்தில் என் மனதில் ஆழ்ந்த யோசனை போதுமான அளவு இரத்தம் உள்ளவர்கள் இரத்ததானம் செய்ய மறுப்பதாலும் இரத்த தானம் செய்ய நினைக்கும் பலருக்கு சில வரன்முறைகளாலும் இரத்த தானம் செய்ய முடியாமல் போகிறது.இதை தானம் என்று எண்ணாமல் பிற்காலத்தில் நமக்கே பயன்படும் என்று எண்ணி செய்யதால் பல உயிர்கள் காப்பாற்ற படலாம்.ஒருவரின் வழி  ந