இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்ன தவறை செய்யக்கூடாது...

படம்
நம் வாழ்வில் நாம் அனைவரும் தவறு செய்திருப்போம். ஆனால் அவர் செய்த தவறை நான் செய்யவேமாட்டேன் என சில எண்ணங்கள் இருக்கும். அது போன்ற உன் எண்ணம் என்ன என நான் என் தம்பியிடம் கேட்டேன்.  அதற்கு அவன், இன்று பலரும் தன் பெற்றோர்களை வயதான காலத்தில் கவனிக்காமல் அவர்களை தனியே விட்டு விடுகிறார்கள். அந்த தவறை நான் செய்யக்கூடாது என்று நினைக்கிறன் என்றான். மேலும் அவன் நான் படித்திருக்கிறேன் மாதம் 750 ரூபாய் கொடுத்து வயதானவர்களை தத்தெடுத்துக்கொள்ளலாம்(அவர்களின் பொருளாதாரதிற்கு உதவுவதன் மூலம்). இந்த நிலைமை என் பெற்றோர்க்கு வரக்கூடாது என்று நினைக்கிறன் என்றான்.  பயப்படாததே அக்கா என் பிள்ளைகள் நாளை அவர்களின் தாத்தா பாட்டியை தத்தெடுக்கும் நிலைமை அவர்களுக்கு வராது. அன்று நீ அன்புக்காக ஏங்கும் பொழுது அன்பு கொடுத்தவர்கள் அவர்கள். இன்று அன்புக்காக ஏங்குகிறார்கள். அவர்களுக்கு அன்பை கொடு. மாறாக அவர்களை கொடுத்து விடாததே.